Thursday, May 26, 2005

Puthandu

This poem i wrote on this Tamil new year..... :)

Download the font here
புத்தாண்டு
==========

புத்தாண்டு, காலையில் அலுவலகத்திற்கு செல்ல
தயாரானேன், என் தாய் தமிழ் நாட்டில் இன்று எல்லோரும்
கொண்டாடமாய் இருப்பார்கள்....

வீட்டை கடந்து சாலை வந்ததும், மறக்காமல் 12 மணிக்கு
தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்ன
நண்பனுக்கு பரிசு வாங்கி அனுப்பினென்...
"மாப்ளே நம்ம செர்ந்து புத்தாண்டு கொண்டாடி 2 வருடம்
ஆகின்றது, நீ நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்"
... அவன் இரவு கூறிய வாழ்துக்கள்.

என் காதலி செல் போனில் சினுங்கினாள், "இந்த ஆண்டு
நாம் இருவரும் செர்ந்து வாழ்க்கை தொடங்க வேண்டும்!!"
அவளது அன்பான கட்டளை.....
முத்தங்களை 800 மைல் தாண்டி அனுப்பினாள்.... என் பங்கிற்கு
நானும் இரண்டு முத்தங்களை பரிசாக காற்றில் அனுப்பினேன்
முகதில் ஒரு இனம் புரியத மகிழ்ச்சி....

சற்று தூரத்தில் இருந்த கோவிலை பார்த்ததும்
வடபழனி கோவிலில், "என் மகன் இரவு பகலாக உழைகின்றான்
அவன் சந்தொஷத்திற்கும் உடல் நலத்திற்கும் எந்த குறையும்
வராமல் பார்த்துகொள்ள வேண்டியது உன் போறுப்பு"
என்று கடவுளுக்கு கட்டளை இட்டு விட்டு தனக்கு எதுவும்
வேண்டாமல் வீடு திரும்பும் என் தாய் நினைவுக்கு வந்தாள்..


அவள் அன்பிற்க்கு என்ன பரிசு தர முடியும்.....??????
கண்டு பிடித்து விட்டேன்... தொலைபேசியில் அழைத்தேன்..
"அம்மா நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?"..
"அய்யா, நான் நல்லா இருக்கேன், நீ உடம்பை பார்த்துக்க
வேலை முக்கியம் தான் ஆனாலும், நேரத்துக்கு சாப்பிடு
நல்லா தூங்கு..அந்த முருகன் அருளால் உனக்கு ஒரு
குறையும் வராது.......

தன் மகன் நன்றாக இருக்கின்றான் என்ற செய்தியை தானே
நம் தாய் பரிசக எதிர் பார்கின்றாள், தொலைவு எவ்வளவு
அயினும் நினைவு நம்மை சுற்றி தானே அவளுக்கு.....
"கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கடவுளும்
தாயும் குணதால் ஒன்று ...." ஆட்டோ சத்ததையும்
மீறி அந்த பழைய பாடல் வரிகள் என் மனதில் ஒலிக்கின்றது.....

--இரா.குமரன்

0 Comments:

Post a Comment

<< Home