Thursday, May 26, 2005

Boomi

Download the font here


காற்றுக்கு ஏது ஓய்வு அது போல
ஓய்வு இல்லாமல் உன்னை காதலிக்கின்றேன்
கடிகார முள்ளுக்கு, நாம் எதற்கு
சுற்றுகின்றோம் என்றே தெரியாது
அது போல என் நினைவுகளும்
காரணம் ஏதும் அறியாமல்
உன்னையே சுற்றி வருகுதம்மா


மெல்லிய தென்றலுடன் பரிசாய்
வரும் பூக்களின் நறுமணம் போல்
தூக்கத்தின் பரிசாய் உனது கனவுகள்!!
எனக்குள் தட்ப வெட்ப நிலையில்
மாறுதலை உருவாக்கிய தாரகையே...
பெண் பூமி போன்று எதையும்
தாங்குவாள் என்று சொல்வார்களே
நான் என்ன அவ்வளவு பாரமா?
உன் மனதில் இருந்து என்னை
தூக்கி எறிந்து விட்டாய் .........

-இரா.குமரன்.

0 Comments:

Post a Comment

<< Home