Urakkam
Download the font here
என் இனியவளெ, விக்கிரமாதித்யனுக்கு பிறகு
கூடு விட்டு கூடு பாயும் வித்தை அறிந்தவளே !!
என் கூட்டிற்குள் இருப்பது உனது உயிர்.
அன்னையின் சொல்லை கேட்டு "என்னை மறந்துவிடு" என்றாயே,
"உனக்கு அன்னையாக இருபேன்", என்று நீ கூறியது
மட்டும் ஏனோ உனது மறதி நோய் அழித்து விட்டது போலும்.
நீ எனக்குள் பூத்த ஒரு பூங்கா, நான்
சுவாசிக்க மறந்த நாளில் கூட உன்
மலர்களுக்கு உரமாகி உயிர் கொடுத்திடுவென்.
உன் மனம் என்றாவது இந்த மூடனை
உனது மறதியில் இருந்து விடுவிக்குமேயானால்,
எனது கல்லறையில் உனது பூங்காவில் இருந்து
சில கண்ணீர் பூக்களை தூவி விடு, நான்
அன்றைக்காவது நிம்மதியாக
உறங்கிடுவேன்.
--இரா.குமரன்.
என் இனியவளெ, விக்கிரமாதித்யனுக்கு பிறகு
கூடு விட்டு கூடு பாயும் வித்தை அறிந்தவளே !!
என் கூட்டிற்குள் இருப்பது உனது உயிர்.
அன்னையின் சொல்லை கேட்டு "என்னை மறந்துவிடு" என்றாயே,
"உனக்கு அன்னையாக இருபேன்", என்று நீ கூறியது
மட்டும் ஏனோ உனது மறதி நோய் அழித்து விட்டது போலும்.
நீ எனக்குள் பூத்த ஒரு பூங்கா, நான்
சுவாசிக்க மறந்த நாளில் கூட உன்
மலர்களுக்கு உரமாகி உயிர் கொடுத்திடுவென்.
உன் மனம் என்றாவது இந்த மூடனை
உனது மறதியில் இருந்து விடுவிக்குமேயானால்,
எனது கல்லறையில் உனது பூங்காவில் இருந்து
சில கண்ணீர் பூக்களை தூவி விடு, நான்
அன்றைக்காவது நிம்மதியாக
உறங்கிடுவேன்.
--இரா.குமரன்.

1 Comments:
if it is your own work, it surely must be appreciated... but i wanna kno who disturbed u so much
Joel vinothsingh
Post a Comment
<< Home